கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்

192 0

காலி – அக்மீமன, ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே  இடம்பெற்ற மோதலில்  11 பேர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதல் சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.

முன்னதாக இந்த கல்லூரியில் பயின்றவர்களும், தற்போது பயிற்சி ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள குழுவினரும் திடீரென விடுதிக்கு வந்து தம்மை தாக்கியதாக காயமடைந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்