யாழ் பல்கலையில் பேரெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

115 0

யாழ் பல்கலையில் மாணவர்களின் பேரெழுச்சியுடன் மாவீரர் தினம் யாழ் பல்கலை மாணவர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ சிவப்பு மஞ்சள் தேசிய எழுச்சி கொடிகள் கட்டப்பட்டதோடு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ,விஞ்ஞானபீட வளாகத்தை சூழ சுட்டிகளால் சுடர்களும் ஏற்றப்பட்டதோடு அகவணக்கம் செலுத்தி 6.05 மணியளவில் மாவீரர் பண்டிதரின் தாயாரால் பொதுச்சுடரேற்றப்பட்டதோடு நினைவேந்தலில் கலந்து கொண்ட அனைவரும் ஈகைசுடரேற்றி மாவீரர் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.சமநேரத்தில் மாணவர்களினால் சிவப்பு மஞ்சள் பரசூட்டும் ஒளியேற்றப்பட்ட சுடருடன் மாணவர்களால் பறக்கவிடப்பட்டது.

தொடர்ச்சியாக மாணவர்களினால்  மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நினைவேந்தலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதோடு,மாவீரர் பெற்றோர்கள், பொதுமக்கள்,பேராசிரியர்கள்,பல்கலைக்கழக  உத்தியோகத்தர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் ,வெளிநாட்டு பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.