சமஷ்டியை விடுத்து வேறு எந்த தீர்வுக்கும் ஆதரவில்லை – சுகாஷ்(காணொளி)

122 0

இலங்கையினுடைய ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காகவும் பொருளாதார ரீதியாக சீர்குலைந்திருக்கின்ற நாட்டினைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பது போல ஒரு நாடகத்தினை ஆடுவதற்கு முற்படுகின்றார்.

இந்த நேரத்தில் தமிழ் கட்சிகள் மிகவும் அவதானத்துடனும், சாதுர்யத்துடனும், சாணக்கியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (26) த.தே.ம.முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.