கசிப்பு உற்பத்தி: 6 பேர் கைது

87 0

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்பட பல இடங்களில் கசிப்பு மற்றும் கோடா என்பன சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, துரிதமாக செயற்பட்ட பொலிஸார் பெருமளவு கசிப்பு மற்றும் கோடா போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 6 பேரையும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்