வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு தாய்லாந்து நிதி உதவி

326 0
இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் நொப்பொர்ன் அட்சரியாவான்சி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை  நேற்று சந்தித்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக 8 லட்சத்து 79 ஆயிரத்து 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.