மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று முதல் சாட்சிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி, முதலாவது சாட்சி பெற்றுக் கொள்ளும் முகமாக இன்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி தொடர்பான சாட்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அதன் ஆளுனர் பல தடவைகள் அழைக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுனரிடம் இன்று காலை 10.00 மணியளவில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.