ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி பதுளை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
ருமேனியாவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு உரிய ஆட்கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (20) காலை குறித்த தனியார் ஹோட்டலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

