ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் வகுப்பு வேறுபாடு, பிரேமதாசவுக்கு இருந்தது போல- டிலான்

230 0

ரணில், சந்திரிக்கா, மஹிந்த ஆகிய மூவரும் மைத்திரிபால சிறிசேன மீண்டும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவதை விரும்பாதுள்ளதாகவும், இதற்குக் காரணம் அவர் தமது சமூக வகுப்பில் காணப்படாமையே எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அரசியல் போக்கு காணப்படுவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசவுக்கு அக்கட்சிக்குள் இருந்த ஒரு நிலையே தற்பொழுது ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் காணப்படுவதாகவும் டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.