சோமாலியாவில் குண்டு தாக்குதல் – 32 பேர் பலி

252 0

கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 32 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியாவின் தலைநகரான மொகதிசுவில் உள்ள பொதுச் சந்தை ஒன்றில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இது ஒரு கார் குண்டுவெடிப்பாக இருக்கும் என்று அந்த நாட்டின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாபார நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் தலைநகரில் இதுபோன்ற தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் அல் ஷபாப் அமைப்பு, இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.