புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

177 0

குடா பயாகல பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி புகையிரத பாதையில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (15) பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

மக்கொன, நிர்மலவத்த பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.