யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் சிலர் வெளியில் தங்கி தமது கல்வியை தொடர்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறு வெளியில் தங்கியுள்ள மாணவர்களை தாம் தங்கியுள்ள விடுதிக்கு வந்து தங்குமாறு ஏனைய மாணவர்கள் அழைத்துள்ளனர்.
எனினும் விடுதிக்கு செல்ல மறுத்துள்ளதுடன் நேற்று பல்கலைக்கழக மைதானத்தில் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தக்குதலின் போது, படுகாயமடைந்த மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் மாணவர்களை விசாரணைக்கு வருமாறு இன்று பொலிஸார் அழைத்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் ஏனைய மாணவர்கள் தங்கியிருந்த நோர்தேன் சென்ரருக்கு முன்பாக இருந்த வீட்டில் தங்கியிருந்த 8 மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 6 பேரை நேற்று கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை, விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் கூறியுள்ளனர்.