பாணந்துறை பிரதேசத்தில் 2 கிலோ 45 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரத்வத்த, விகாரைக்கு அருகில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 2 கிலோ 45 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைதுசெய்யப்பட்டவர் 26 வயதுடைய ஒருவர் எனவும் அவர் வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.