யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருட்களுன் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் வெள்ளிக்கிழமை (11) கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

சுற்றி வளைப்பின் போது ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 24 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

