இளைஞர், யுவதிகளுக்கு எதிராக வீதியில் இறங்க தயார் – பிரதமர்

254 0

நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் போது பாதகம் ஏற்படுத்தும் சகலருக்கும் எதிராக வீதியில் இறங்கி பதில் வழங்க தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டை உருவாக்கும் போது பாதகம் இருக்குமாயின் அதற்கு எதிராக வீதியில் இறங்க தயாராக வேண்டும்.

எதிர்வரும் மாதம் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படும்.

அதனை எதிர்ப்பவர்களுக்கு எதிராக தாங்கள் வீதியில் இறங்கவும் தயார் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இணைந்து செயற்படும்.

அதற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு ஐக்கிய தேசிய உரிய பதிலை வழங்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.