இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார்

366 0

மூன்று நாள் உத்தியோகபூர்வ   பயணத்தை  மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள புதிய இருதரப்பு ஒப்பந்தங்கள், திருகோணமலை மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் என்பன குறித்து கூடிய கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.