ஹட்டனில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது(காணொளி)

290 0

நுவரெலியா ஹட்டனில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – ஆரியகம பகுதியில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
ஹட்டன் ஆரியகம பகுதியில் வசிக்கும் நதுன் சமீர என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் மோட்டர் சைக்கிளே தீயில் எரிந்துள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிள் எரியும் வெளிச்சத்தை கண்ட வீட்டின் உரிமையாளர், அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்த போதிலும், மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தீயினால் குறித்த நபரின் கடை பகுதியும் சிறிதளவு சேதமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த குறித்த மோட்டார் சைக்கிளை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் எனவும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்