ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து : 16 பேர் காயம் !

227 0

வாதுவ, சுதுவெலிமங்கட பகுதியில் லொறியும் பஸ் ஒன்றும் மோதியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை  (02)  இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றுடன் லொறி மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 16 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.