பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தகுதி

329 0

11வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கு ஏற்கனவே 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.

தகுதி சுற்றில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, இலங்கை, அயர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறின.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும், எதிர் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

தனது பிரிவில் இடம் பிடித்துள்ள இலங்கை, அயர்லாந்து அணிகளை ஏற்கனவே லீக்கில் வென்று இருந்ததால் அதன் மூலம் கிடைத்த 4 போனஸ் புள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 8 புள்ளிகளுடன் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அத்துடன் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய அணி உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து முதல் வெற்றியை பெற்றது.

ஏற்கனவே 4 போனல் புள்ளிகளை தன்வசம் கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா மொத்தம் 6 புள்ளிகளுடன் உலக போட்டிக்கு தகுதி பெற்றதுடன், இறுதிப்போட்டியையும் நெருங்கியது.

இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அயர்லாந்தை தோற்கடித்தது முதல் வெற்றியை சொந்தமாக்கியது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சூப்பர் சிக்ஸ் சுற்றின் கடைசி ஆட்டங்களில் இந்தியா-பாகிஸ்தான், அயர்லாந்து-தென்ஆப்பிரிக்கா, இலங்கை-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.