சைட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க மருத்துவ சபை இன்று கூடுகிறது

218 0
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கை மருத்துவ சபை இன்றைய தினம் ஒன்று கூடவுள்ளது.
மருத்து சபையின் செயற்பாட்டு அலுவலகர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டாம் திகதி ஏற்கனவே மருத்துவ சபை கூடி இருந்தது.
இதன்போது சகல உறுப்பினர்களதும் ஒன்று கூடும் சந்தர்ப்பத்திலேயே இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.