மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தவர் மரபணு பரிசோதனையில் சிக்கினார்

130 0

இரத்தினபுரி – எஹலியகொட பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியொருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி, கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர், மரபணு (DNA) பரிசோதனையின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பலிகல பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் புதன்கிழமை (28) கைது செய்யப்பட்டதாக எஹலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எஹலியகொட – கொஸ்கஹமுகலன பகுதியில் பாடசாலை நிறைவடைந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி குறித்த நபர் கொலை செய்திருந்தார்.

இந்த கொலைச்சம்பவம் தொடர்பான வழக்கு மீதான விசாரணைகள் அவிசாவளை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே, சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹலியகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை அவிசாவளை நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (29) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.