ஈரானில் கலவரத்தை தூண்டியதாக முன்னாள் அதிபரின் மகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஈரானில் பத்து நாட்களுக்கும் மேலாக ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டங்களை ஒடுக்க ஈரான் பாதுகாப்புப் படை கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. எனினும், நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் போராட்டத்தை தூண்டியதாக முன்னாள் ஈரான் அதிபர் அலி அக்பர் ஹாஷிமி மகள் ஃபாசியா ஹாஷிமி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஃபாசியா மீது முன்னரே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஈரான் அரசை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்றும், நபிகள் நாயகத்தை அவமதித்தாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சூழலில் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானில் போராட்டத்தில் பங்கெடுத்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

