நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதில் அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு பணத்தை செலவிட தயாராகின்றனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விசனம் வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் வருகின்றது சுற்றுலாத்துறைக்குபொறுப்பான அமைச்சர் உட்பட சுற்றுலாத்துறையின் முக்கிய அதிகாரிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக கொழும்பை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் என்ன பயன்ஏற்படப்போகின்றது என கேள்வி எழுப்பியுள்ள கர்தினால் பொக்கட்கள் காலியாகவுள்ளன,இலங்கை உலகின் ஒவ்வொரு நாட்டிடமும் உதவி கேட்கும் நாடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் தலைவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர் இதுதான் அவர்களின் பொறுப்புணர்வாஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர் போதிய அளவு உணவும் ஊட்டச்சத்தும் இல்லாததால் மாணவர்கள் பாடசாலைகளில் நோய்வாய்படுகின்றனர் என தெரிவித்துள்ள கர்தினால் ஆனால் தலைவர்கள் மக்களின் துயரங்கள் நெருக்கடிகளை பார்க்காதவர்கள் போல நடந்துகொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

