தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு – பெல்சியம்

158 0

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பெல்சியம் அன்ற்வெப்பன் மாநகரில் மிக எழுச்சியுடன் பெருமளவான மக்கள் ஒன்று கூடி நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுடன் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் இடம் பெற்றது. இன்றைய இந்நிகழ்வில் தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த கவிதைகளும் நினைவுரைகளும் எழுச்சிப் பாடல்களும் கலைநிகழ்வுகளாக இடம்பெற்றன. இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் ஒன்று கூடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வலிசுமந்த உணர்வுடன் வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர்.