போதைப்பொருள் விற்ற சிறுமி மீட்பு! -பெற்றோருக்கு எதிராக வழக்கு

107 0

தாயாரால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு, நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று (21) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி, 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தாயாரின் பாதுகாப்பிலிருந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் சிறுமி முற்படுத்தப்பட்ட போது, அவரை சிறுவர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் மீது நீதிமன்ற வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.