3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் சிநேகபூர்வ சந்திப்பு

192 0

3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வமாக சந்தித்து உரையாடினார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக  லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும்  இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் முதல்பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.