பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டம் புத்தளத்தில் முன்னெடுப்பு

177 0

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டமொன்று நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம் 19 ஆம் திகதி மாலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சானக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது புத்தளம் மாவட்ட அரசியல் தலைமைகளும் குறித்த கையெழுத்து சேகரிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வழு சேர்க்கும் முகமாக கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மூவின மத மக்களும் கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கி தத்தமது கையொப்பங்களையிட்டனர்.