முஸ்லிம் காதலியிடம் பறக்க முயன்ற இளம் பிக்குவுக்கு சிக்கல்

115 0

சீதுவை நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி  நெதகமுவ மஹாநாம படு கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபரான இளம் பிக்குவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு நீர்கொழும்பு  மேலதிக நீதவான் மிலான் ஜயசூரிய நேற்று (17) சனிக்கிழமை   உத்தரவிட்டார்.

ஏக்கல சுகந்தசிறி (வயது 18) என்பவரே விளக்கமளிகளில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட சந்தேக நபராவார்.

சீதுவை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டாரவின்  வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

அவர், விஹா​ராதிபதியை கொலைச் செய்துவிட்டு, விஹாரையில் இருந்த பெறுமதியான இரண்டு வாகனங்களை விற்றுவிட்டு, டுபாயில் உள்ள தனது முஸ்லிம் காதலியிடம் செல்வதற்கு முயன்ற போதே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விஹாராதிபதியை படுகொலைச் செய்வதற்காக முஸ்லிம் காதலியின் உறவினர்கள் சிலரின் ஒத்துழைப்பும்​ பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.