இளம்பிக்குவுக்கு 23 வரை விளக்கமறியல்

163 0

சீதுவை நந்தாராம விகாரையின் விகாராதிபதி  நெதகமுவ மஹாநாம கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவியில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபரான இளம் பிக்குவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு  மேலதிக நீதவான் மிலான் ஜயசூரிய 17 ஆம் திகதி சனிக்கிழமை உத்தரவிட்டார்.

ஏக்கல சுகந்தசிறி (வயது 18) என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட சந்தேக நபராவார்.

சீதுவை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டாரவின்  வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.