வவுனியா உட்பட 7 புதிய மாநகர சபைகள்:முதல் கட்ட வர்த்தமானி வெளியீடு

132 0

அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பிரதான நகரங்களை கொண்ட மாநகர சபைகளாக அபிவிருத்தி செய்யும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 7 மாவட்டங்களில் தலைநகரங்களை 7 மாநகர சபைகளாக தரம் உயர்த்தும் முதல் கட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 7 நகர சபைகள் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படும். வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை ஆகியவற்றை மாநகர சபைகளாக தரமுயர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை பெயர் பலகை-Trincomalee Name Board

மன்னார் மற்றும் அம்பாறை தொடர்பான வர்த்தமானி இன்னும் வெளியிடப்படவில்லை

மன்னார் நகர சபை-Mannar Urban Council

 

மன்னார், அம்பாறை நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.

அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.