பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய கோரி 5ஆவது நாளாகவும் கையெழுத்து வேட்டை

235 0

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிபோராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று (14.09.2022) 5ஆவது நாளாக மன்னாரில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

இந்த நடவடிக்கையானது மன்னார் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன் தலைமையில் மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.

 

இதில் மக்கள், அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கையொப்பமிட்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய கோரி 5ஆவது நாளாகவும் கையெழுத்து வேட்டை (VIDEO) | Srilanka Terrorism

Gallery Gallery Gallery Gallery