சிவில் அமைப்புகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

147 0

இலங்கையின் பல  பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப்  பிரதிநிதிகள், ஊடகவியலாளர் மற்றும்  பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு செல்லுகின்ற வேளையில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளார்கள் மற்றும்  பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியாக  கண்காணிப்பிற்குள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.

அதுமட்டுமன்றி சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கியமான  ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்ற நிலைமைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்  கொண்டு போகின்றது.

ஆகையால் மேற்படி  விடயங்கள் சிவில் அமைப்புக்களுக்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ இடம்பெறக் கூடாது என வலியுறுத்தி இன்று (14) புதன்கிழமை வடக்கு  கிழக்கிலுள்ள  08  மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.

குறித்த மஹஜர் கையளிப்பானது வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஊடாக  இடம் பெற்றது.

அதன்படி திருகோணமலை மாவட்டத்திலும் இடம் பெற்ற  கவனயீர்ப்பானது திருகோணமலை   மாவட்ட மனித உரிமை ஆணையகத்திற்கு முன்னால் (தபால் கந்தோர் வீதி) இடம் பெற்றது.

இதில் பெரும்பாலானோர் கலந்து கொண்டு மகஜரையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்தில் கையளித்தனர்.