காலி கோட்டை ஆர்ப்பாட்டம் மீதான அத்துமீறல் : இராணுவ தலையீட்டுக்கு எதிராக 11 சட்டத்தரணிகள் மனுத்தாக்கல்

243 0

காலி மைதானத்தில் இலங்கை – அவுஸ்திரேலியாவிற்கு இடையில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, காலி கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவ தலையீட்டுடன் தாக்கப்பட்டு கலைக்கட்ட சம்பவம் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி உயர் நீதிமன்றில் 11 சட்டத்தரணிகள் தனித் தனியாக இன்று ( 01) மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஜூலை முதலாம் திகதி அமரதிவாகர லியனாராச்சி மற்றும் ஜி.எச்.அஜித் குமார ஆகிய இரு சட்டத்தரணிகளினால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று 11 சட்டத்தரணிகள் தனித் தனியாக 11 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தரணிகளான நாளனி மனதுங்க, சம்ந்தன கொடகந்தகே, கோபிக லொக்குகே, துஷித்த மதுசங்க, சமித் துஷார கால்லகே, எரங்க ருவன் ஹேமந்த, ஜோதிரத்ன ஆரச்சி, குமுய்டு நாணயக்கார, சந்ரநாத் நாரங்கொட, ; ரெனுகா சாந்திமாலா, குசுமாவதி ; பஹலகமகே ஆகியோரே இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தரணி மனோஜ் குணவர்தன ஊடாக அவர்கள் இம்மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் , பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி, சட்டமா அதிபர்  உள்ளிட்டோர்  இம்மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் தாம் ஈடுபட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.அப்போது அந்த வளாகத்திற்குள் நுழைந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர் தங்களது போராட்ட பதாகைகளை வலுக்கட்டாயமாக அகற்றியதாக அம்மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற சட்டத்தரணிகளுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை காண காலி கோட்டைக்கு செல்லவும், இலங்கை அணியை உற்சாகப்படுத்தவும் ஆதரவளிக்கவும் தாம் தீர்மானித்ததாகவும், அங்கிருந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நடத்தைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவும் முடிவு செய்ததாகவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, மனுதாரர்கள் கைகளில் தேசியக் கொடிகளுடன் ஏனைய சட்டத்தரணிகள் குழுவுடன் காலி கோட்டையின் அரண்களை அடைந்து காலி கோட்டை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள பொது நுழைவாயில் ஊடாக காலி கோட்டைக்குள் உள நுழைந்ததாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது தன்னிச்சையாகச் செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாடியதாகவும்

அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு தமக்கு அடிப்படை உரிமை உண்டு என ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய போதிலும், அவ்வாறானதொன்றை இந்த இடத்தில் மேற்கொள்ள முடியாது என இராணுவத்தினர் .

மறுத்ததாகவும் மனுக்ல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பு ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் கொடூரமான சித்திரவதைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் இராணுவத்தினரின் செயற்பாட்டினால் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர் .