நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல

205 0

தான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (20) மாலை கொழும்பு கங்காராம விகாரைக்கு வந்த அவர், வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி – ஜனாதிபதி அவர்களே, மக்கள் மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார்கள். நீங்கள் ராஜபக்சக்களின் நண்பன் அல்லவா? பிறகு எப்படி வித்தியாசம் இருக்கும்?

“நான் எப்படி ராஜபக்ஷக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்கு தெரிந்த காலத்திலிருந்தே நான் அவர்களுக்கு எதிரானவர். நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு பத்திரிக்கையாளராக நீங்கள் ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட வேண்டும், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்”