ரயில் மோதியதில் யானை இறப்பு

162 0

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் பயணித்த  கடுகதி ரயிலில் மோதி காட்டு யானையொன்று  இன்று (20) காலை இறந்துள்ளதாக அக்கோபுர பொலிஸால் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற ரயிலில் அக்போபுர பகுதியில் வைத்து காட்டு யானை மோதுண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்துள்ள யானைக்கு பன்னிரண்டு வயதிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.