வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை வளாகத்துக்குள் துவிச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது.
நேற்று 18) பிற்பகல் இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு இளைஞன் என CCTV காணொளியின் மூலம் இணங்காணப்பட்டுள்ளது.
பாடசாலையின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விசாரா உத்தியோகத்தர் ஒருவரின் துவிச்சக்கரவண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
அவ் உத்தியோகத்தர் அலுவலகத்திற்குள் வேலையாக இருந்தபோது பாடாசாலை வளாகத்திற்குள்ச் சென்ற குறித்த இளைஞன் துவிச்சக்கரவண்டியை திருடி சென்றுள்ளார் அதற்கான CCTV காட்சிகள் முழுமையாக கிடைக்கப்பெற்றுள்ளது .
இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிசாரால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான திருட்டுச்சம்பவங்கள் அண்மைக்காலமாக வவுனியாவில் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.