யாழ். கடற்பரப்பில் வைத்து 12 இந்திய மீனவர்கள் கைது

129 0

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் நாளை திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.