மட்டக்களப்பில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்து ; 5 பேர் படுகாயம்

185 0

மட்டக்களப்பு ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வீதியில் காத்திருந்தவர்கள் மீது இன்று (7) அதிகாலை பஸ்வண்டி மோதியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி ஓரத்தில் மக்கள் மோட்டர்சைக்கிள்களுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ; சம்பவதினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுகின்றவர்களை செங்கலடி பிரதேசத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு ஆரையம்பதியை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி வீதி ஓரத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர் இவர்களை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதையடுத்து ; பஸ் சாரதி பஸ்வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதுடன், பஸ்வண்டியை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .