யாழ். பல்கலைகழக மாணவி மீது ஆசிட் வீசுவதாக தண்ணீர் போத்தலை வீச முயன்ற இளைஞரால் பரபரப்பு

122 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்பாக புதுமுக மாணவி ஒருவர் மீது ஆசிட் வீசுவதாக தண்ணீர் போத்தலை வீச முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவமானது இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் கிளைகளைப் படத்தின் புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஆரம்பமாகி வழிப்படுத்தல் நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்று காலை 8.00மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வழிப்படுத்தல் நிகழ்விற்க்காக வருகை தந்த பல்கலைக்கழக புகுமுக மாணவி ஒருவர் மீது அசிட் வீசப் போவதாக மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரித்த நிலையில் அசிட் போத்தல் தண்ணீர் போத்தல் என தெரியவந்தது.

எனவே மாணவர்கள் இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு இது தொடர்பாக அறிவித்திருந்தனர்.இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் இளைஞனின் புகைப்படத்தையும், இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வாகனத்தின் உடைய இலக்கத்தையும் புகைப்படத்தையும் எடுத்துச் சென்றதோடு, மாணவர்களின் வாக்கு மூலத்தையும் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.