5 வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார்-பிரேமதாச

299 0

ஐந்து வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இரண்டரை ஆண்டுகளில் அரசாங்கம் நாட்டை அழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசாங்கம் நாட்டை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நாங்கள் நாட்டை பொறுப்பேற்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்