குருந்தூர்மலையில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை இன்று கைவிடப்பட்டுள்ளது.-காணொளி இணைப்பு.

233 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை குருந்தூர்மலையில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கை இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,மக்களின் எதிர்ப்பால் குறித்த நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது.

புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் , இன்று காலை ஒன்பது மணிக்கு நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் நிகழ்விருந்தது.இதனை அடுத்து மக்களால் அங்கு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதனை அடுத்த நிகழ்வு கைவிடப்பட்டது.

இதனை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் சார்ந்த அதிகாரிகள்,விகாரையின் கட்டுமானப் பணிகளுடன் கூடிய,அனைத்து வேலைகளையும் தற்காலிமாக இடைநிறுத்துமாறு கூறியுள்ளனர்.இந்த நிலையில் அங்கிருந்து கட்டுமானப் பொருட்கள்,மற்றும் பிரதிஸ்டை நிகழ்வுக்குரிய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.எனினும் குறித்த விகாரையின் 80 வீதமான பணிகள் நிறைவைடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.