கண்கவர் கலையம்சங்களுடன் பார்வையாளர்களை வரவேற்கும் மெரினா மால்

174 0

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது ‘தி மெரினா மால்’ வணிக வளாகம். ஏகாட்டூரில் அமைந்துள்ள இந்த மாலில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் வணிக மையங்களை அமைத்துள்ளன. இந்நிலையில், கோடை காலத்தையும் வசந்த காலத்தையும் வரவேற்கும் வகையில் இங்கு பிரமாண்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

துணி மற்றும் ஒயர்களைக் கொண்டு வண்ணத்துப் பூச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர அழகான தோட்டம், 15 அடி உயரத்தில் பனியாலான உலக உருண்டை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இவை அனைத்தும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக வணிக வளாக தலைமை வர்த்தக அதிகாரி முகமது வாசிப் தெரிவித்துள்ளார்.