சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு 20ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் – ரணில்

186 0

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் இம்மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.