சந்தோசமாக சுதந்திரத்தை கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இல்லை!

298 0

சுதந்திர தினத்தை சந்தோசமாக கொண்டாடும் நிலையில் நாட்டில் யாரும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவை பார்வையிட சென்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் சுதந்திர தினமான இன்று உரிமைகளை கோரிய பொது மக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் என பலரும் சிறையில் வாடும் இந்நிலையில் சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாட முடியும் என வருத்தம் தெரிவித்தார்.

மேலும் விமல் போன்ற மக்கள் தலைவர்கள் அரசியல் பலிவாங்கல்களின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் என பலரும் இந்த அரசாங்கத்தினால் தண்டிக்கப்பட்டிருக்க இந்த வருட சுதந்திர தினமானது கொண்டாடும் நிலையில் இல்லை என்பதே இன்றைய நாளில் கூறக்கூடிய ஒன்றாகும் எனவும் பந்துல குறிப்பிட்டுள்ளர்.