கிளிநொச்சி முரவுமோட்டை ஆற்றில் சடலம் மீட்பு

423 0

625.0.560.320.160.600.053.800.668.160.90கிளிநொச்சி – முரசுமோட்டைப் பகுதியில் உள்ள ஜயன்கோவிலடி ஆற்றங்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முரசுமோட்டை சேற்றுக் கண்டியை சேர்ந்த 33 வயதான மகாலிங்கம் சுமன் என்பவரே இச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் அவர் நீராடிக்கொண்டு இருந்ததை ஊர் மக்கள் கண்டுள்ளனர். அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.
இதனையடுத்து ஆற்றில் இறங்கி தேடிய போது அவரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு கரையில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சுமார் 2 மணித்தியாலங்கள் கடந்து விட்ட நிலையிலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவில்லை.
குறித்த நபர் உயிரிளந்ததில் சந்தேகம் உள்ளது. பொலிஸார் சீரான விசாரணைகளை மேற்கொள்ள பின்னடிக்கின்றார்கள் என்றும் உயிரிளந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.