யாழில் ஒரு ரூபாவுக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி

157 0

ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ். கிளை தொண்டர்களால் நேற்றையதினம் ஒரு கிலோ நம்பர் 1 நாட்டரிசி ஒரு ரூபாவிற்கு வழங்கப்பட்டது,

தற்கொலை தடுப்பு செயற்பாட்டை முன்னெடுத்து வரும் நாம், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தற்கால பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு மன ரீதியான ஆறுதல் தேவை என்பதை உணர்த்தும் முகமாக இவ் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு ரூபா உள்ளவருக்கு மட்டுமே அரிசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ். முதிரைச் சந்தியை அண்மித்த கல்வியங்காடு சட்டநாதர் கோவிலடியில் இவ்விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது