நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

189 0

2022 ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்வது தொடர்பான புதிய அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் பாடசாலைகளுக்கு நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே இன்றுடன் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.