மட்டு களுதாவளையில் மொட்டுகட்சியின் காரியாலயத்தின் பெயர்பலகைகள் தீயிட்டு எரிப்பு

126 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரின் களுதாவளை காரியாலயத்தின் பெயர்பலகைகள் கழற்றி தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி களுதாவளையில் அமைந்துள்ள மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரின் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்று கூடிய சிலர் கட்சி காரியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த பெயர்பலகைகளை கழற்றி காரியாலயத்துக்கு முன்னால் போட்டு அதனை தீயிட்டு எரித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.