வேண்டி இவள் அழைக்கின்றாளே அது யாரை? – வன்னியூர் குருஸ் –

414 0

வேண்டி இவள் அழைக்கின்றாளே அது யாரை?
தேடி இவள் அழுகின்றாளே அது யாரை?
கோலங் கெட்டு நிலைமாறி நிற்குமிவள்
ஓலமிட்டுச் சொல்லும் வார்த்தைகள்தான் என்ன?

கடவுள் என்பவன் இன்னும் இருக்கின்றானா?
விதவிதமாய் வதைப்பதைக் கண்டும் ரசிக்கின்றானா?
தூணிலும் துரும்பிலும் துகழாக இருப்பவனென்றால்
எங்களின் துயரத்தில் எதுவாக இருக்கின்றான்.

எறியும் கணைகள் எம்மேல் விழுந்து
உடல்கள் எங்கும் சிதறிக் கிடக்க
அறியும் தன்மை அற்றதாய் அவனும்
சடமே என்றா செத்துக் கிடந்தான்? – வன்னியூர் குருஸ் –