கடுவலை நீதிவானின் பாதுகாப்பு நீக்கம் ; ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு வழங்காமை காரணமா ?

160 0

கடுவலை நீதிவான் சானிமா விஜேபண்டாரவின் பாதுகாப்பு திடீரென  நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 5 ஆம் திகதியும் ; 6 ஆம் திகதியும் பாராளுமன்றை அண்மித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்குமாறு தலங்கமை பொலிஸார்  கடுவலை நீதிவானிடம் கோரியிருந்த நிலையில், அவர் அக்கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே அவரது வீட்டின் பாதுகாப்பு திடீரென அகற்றப்பட்டதாக அறிய முடிகிறது.
<p>இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் கேசரி வாரவெளியீடு வினவிய போது, அவ்வாறு பாதுகாப்பு அகற்றப்படவில்லை எனவும், ; தவறான புரிந்துணர்வு பாதுகாப்பு அகற்றப்பட்டதாக தகவல் பரவக் காரணம் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கடுவலை நீதிவான் சானிமா விஜேபண்டாரவின்&nbsp; உத்தியோக பூர்வ இல்ல வளாகத்தை தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி&nbsp; வியாழக்கிழமை (5) தனிப்பட்ட ரீதியில் சோதனை செய்த பின்னர்&nbsp; வீட்டின் பாதுகாப்பினை அகற்றியுள்ளதாக, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை கொண்ட ; நீதிச் சேவை சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவித்து, தலங்கமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை கோரியுள்ளது

குறித்த சங்கத்தின் தலைவரான நுகேகொடை நீதிவான் பிரசன்ன அல்விஸ், செயலாளரான பூகொடை மேலதிக மாவட்ட நீதிபதி பசன் ; அமரசேன&nbsp; ஆகியோரின் கையெழுத்துடன் இந்த&nbsp; முறைப்பாடு அனுப்பட்டுள்ளது.

நீதிவான்களின் பாதுகாப்பு அவ்வந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் அதற்கு பொலிஸ் மா அதிபரின்&nbsp; சுற்று நிருபம் ஒன்று உள்ளதாகவும், அந்த சுற்று நிருபத்தை மீறி தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து இனி மேல் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதை தடுக்குமாறும்&nbsp; நீதிச் சேவை சங்கம் கோரியுள்ளது.<

இவ்வாறான நடவடிக்கைகள், நீதிமன்றின் சுயாதீனமான நடவடிக்கைகள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் செயற்பாடுகள் என சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், ; உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக&nbsp; ஏற்பட முடியுமான பாரிய அனர்த்தத்தை தடுக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.