அவசரகால நிலை பிரகடனம் குறித்து அமெரிக்கா கரிசனை

327 0
இலங்கையில் மற்றொரு முறை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் போராடும் இலங்கையர்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று காலை தனது உத்தியோகபூா்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையர்கள் தற்போது எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை மீண்டும் செழிப்பானதாக கட்டியெழுப்ப வேண்டும். அவசர காலச் சட்டங்கள் போன்றவை இதற்கு உதவாது எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.